சேதனப் பசளையில் பயிர்ச்செய்கை 4 scaled
செய்திகள்இலங்கை

இரணைமடுக் குளத்தின் கீழ் சேதனப்பசளையில் பயிர்ச்செய்கை

Share

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான காலபோக செய்கை சேதனப் பசளையை மாத்திரம் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரப்பரளவில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை புதிதாக 500 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்ச் செய்கைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனப்பசளையை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

காலபோக பயிர்ச்செய்கை ஆரம்ப திகதியாக எதிர்வரும் 06 ஆம் திகதியாகவும் இறுதி அறுவடைத் திகதி 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதியாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசால் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்துக்கு 90.2 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...