884255 corona deaths
செய்திகள்இலங்கை

கொவிட் நோயாளர்கள் தப்பியோட்டம் – 32 பேருக்கு தொற்று உறுதி!

Share

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மூவரும் மருத்துவமனையில் தங்கிச்செல்லாமல் தப்பிச்சென்றிருந்தனர்.

இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதாரப் பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு பேரை தனிமைப்படுத்தியிருந்தனர் எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதனை பின்பற்றாது வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமத்தை சேர்ந்த 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...