gmoa
செய்திகள்இலங்கை

மீண்டும் தலைதூக்கும் கொரோனாத் தொற்று! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Share

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் பாரதூரமான நிலைமை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைரஸின் பாரதூரத்தன்மையை மக்கள் மறந்துவிட்டனர். அது தொடர்பில் அவர்களை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியாபோன்ற நாடுகளில் வைரஸ் பரவல் தலைதூக்கியுள்ளது. இதனால் மாநிலங்கள் முடக்கப்பட்டுவருகின்றன. எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டை முடக்கினால் ஏற்படும் பாதிப்புகளை இலகுவில் கணித்துவிடமுடியாது.

அதேவேளை, எதிர்காலத்தில் கொரோனா மரண வீதமும் அதிகரிக்கும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...