gmoa
செய்திகள்இலங்கை

மீண்டும் தலைதூக்கும் கொரோனாத் தொற்று! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Share

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் பாரதூரமான நிலைமை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைரஸின் பாரதூரத்தன்மையை மக்கள் மறந்துவிட்டனர். அது தொடர்பில் அவர்களை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியாபோன்ற நாடுகளில் வைரஸ் பரவல் தலைதூக்கியுள்ளது. இதனால் மாநிலங்கள் முடக்கப்பட்டுவருகின்றன. எமது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டை முடக்கினால் ஏற்படும் பாதிப்புகளை இலகுவில் கணித்துவிடமுடியாது.

அதேவேளை, எதிர்காலத்தில் கொரோனா மரண வீதமும் அதிகரிக்கும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...