கொரோனாத் தொற்று – 89 சிறார்கள் உயிரிழப்பு!

Corona 13 20200702 1 570 850

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இதுவரையில் 89 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிறுவர்களை பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றொரும், பாதுகாவலர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பல நல சுகாதாரப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலிடி சில்வா கூறியவை வருமாறு,

” இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்த நாளிலிருந்து இற்றைவரை 10 ஆயிரத்து 500 கர்ப்பிணி தாய்மாருக்கு வைரஸ் தொற்றியுள்ளனர். இவர்களில் 60 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர்.

95 வீதமான தாய்மார் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

சிறார்கள் மத்தியில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருகின்றது. 18 வயதுக்கு குறைவான 89 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பெற்றோர், உறவினர், பாதுகாவலர்கள் மற்றும் அயலவர்கள் ஊடாகவே அவர்களுக்கு வைரஸ் தொற்றுகின்றது. எனவே, சிறார்களை பாதுகாக்க பொறுப்புடன் செயற்படுவோம்.”- என்றார்.

#SriLankaNews

 

Exit mobile version