நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

dead body 1

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து மகாவலி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனைக் கண்டறியும் பணியில் இரண்டாவது நாளாக இன்று காலை கடற்படையின் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேடுதலின் பின்னர் இன்று பிற்பகல் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சடலம் தொடர்பான முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதுடன்,
பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version