Elephant boom
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முரண்பாடு: இளைஞன் பலி; பிக்கு காயம்

Share

மட்டக்களப்பு -வாகரை ஓமடியாமடுவில் பன்சாலை ஒன்றில் இடம்பெற்ற யானைவெடி வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேரர் ஒருவர் காயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாகஸ்த்தன வெலிக்கந்தவைச் சேர்ந்த சிசிரகுமார (வயது- 27) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

குறித்த இடத்திற்குச் சென்ற ஏழு இளைஞர்களுக்கும் ஓமனியாமடு விகாராதிபதிக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது இளைஞனின் வயிற்றில், யானைகளை விரட்டப்பயன்படுத்தும் வெடிபட்டதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி இ.சிகாப்தின் விசாரணைகளை மேற்கொண்டார்.

வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...