india
செய்திகள்இந்தியா

இந்தியாவில் தொடரும் கொலைகள்…..

Share

விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகே இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.

இந்தியாவின் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அச்சடலத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தடுப்பு வேலியில் ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்ட பகுதிக்கு அருகில் இச்சடலம் மீட்கப்படுள்ளது.

மேலும் இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கொடூர கொலை சீக்கியக் குழுவான நிஹாங்ஸ்களால் நடத்தப்பட்டிருக்குமென சந்தேகிக்கப்படுகின்றது.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்தஇளைஞரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் சோனிபட் பொலிஸார் அந்த சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இக் கொலை தொடர்பில் பொலிஸ் தரப்பில் எதுவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...