image ba58952b48
செய்திகள்இலங்கை

யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்!

Share

யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள இந்தக் கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எதுவித சூழல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கரையோரப் பாதுகாப்பு சட்டமூலத்தின்படி, கரையோரத்தை அண்டிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வின் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அதற்காகக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியும் பெறப்பட வேண்டும். ஆனால், மண்டைதீவு கிரிக்கெட் மைதான நிர்மாணத்தில் இவ்வாறான எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

இதனால், இந்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த சூழல் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக, மண்டைதீவின் கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை அடியோடு இடைநிறுத்துமாறு குறித்த அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...