Sri Lanka vote polls f7e68bf67c9e707d0d548795e0b5e2cb
செய்திகள்இலங்கை

தேர்தல் வேட்பாளர்கள் மீது வழக்கு: ஆணைக்குழுவிடம் பொலிஸ் அறிவிப்பு

Share

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத 2,000 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்னாயக்க இந்தத் தகவலை சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளில் பின்வருவோர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் 13 பேர். நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் 1,700 இற்கும் மேற்பட்டோர்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...