Charles Nirmalathan 1
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

மீனவர்களிடையே மோதல்! – அரசில் இராஜதந்திரமா? – கேள்வியெழுப்புகிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்

Share

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசினால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமுன்றத்தில் இன்று கடற்றொழில் அமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பிய அவர்,

” இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என நீங்கள் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் உறுதியளித்தீர்கள். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது கடற்றொழிலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன..

இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா.” – என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

” அரசியல் உள்நோக்கத்துடன்தான் இந்த கேள்வியை எழுப்புகின்றீர்கள். உங்கள் நல்லாட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. எங்கள் ஆட்சியில் இப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...