Charles Nirmalathan 1
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

மீனவர்களிடையே மோதல்! – அரசில் இராஜதந்திரமா? – கேள்வியெழுப்புகிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்

Share

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசினால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமுன்றத்தில் இன்று கடற்றொழில் அமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பிய அவர்,

” இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என நீங்கள் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் உறுதியளித்தீர்கள். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது கடற்றொழிலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன..

இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா.” – என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

” அரசியல் உள்நோக்கத்துடன்தான் இந்த கேள்வியை எழுப்புகின்றீர்கள். உங்கள் நல்லாட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. எங்கள் ஆட்சியில் இப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...