“முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வாருங்கள். அரசாங்கத்தின் பலத்தைக் காட்டுகின்றோம்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.
அத்துடன், விவசாயிகளை பயன்படுத்தி எதிரணிகள் போராட்டம் நடத்துவதாகவும், இதன் பின்னணியில் முழுமையாக அரசியலே இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, நாட்டை மீண்டும் 88-89 யுகத்தை நோக்கி அழைத்துச்செல்வதற்கு சிலர் முற்படுகின்றனர் என்று ஜே.வி.பியினரை மறைமுகமாக சாடியுள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
#SriLankaNews