Jaffna Press Meet 1
செய்திகள்அரசியல்இலங்கை

இறந்தோரை நினைவு கூர நவம்பர் 20: எதிர்கால சந்ததிக்கு தவறாகக் கடத்தும்

Share

தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு, வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு தவறாக கடத்துமென பொது அமைப்புக்கள் சில வலியுறுத்தின.

கிராமிய உழைப்பாளர் சங்கம், மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு உள்ளிட்ட சில அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஆயர்களை எதிர்க்கவில்லை அவர்களை மதிக்கின்றோம். அதே நேரத்தில் நமது மனக்கவலையை நாம் இங்கே தெரிவிக்கின்றோம்.

கத்தோலிக்கர்களிடம் மாத்திரமே நாங்கள் கோரியதாக ஆயர் ஒருவரின் கருத்து பத்திரிகையொன்றில் இன்று வெளியானது.

இது தொடர்பில் ஆயர்கள் தெளிவுபடுத்தி தமது முடிவு தொடர்பில் பரிசீலிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் கடந்த காலங்களில் மாவீரர் நினைவு நாளை கொண்டாடும் பொழுது ஆலயங்களிலே மணி அடித்து அந்த நிகழ்வுக்கு வலுச் சேர்த்தவர்கள் என்ற வகையில் ஆயர்களுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் மிகப் பலமான பங்களிப்பு இருக்கிறது.

இந்து ஆலயங்களை விட கிறிஸ்தவ ஆலயங்களை இந்த செயல்பாட்டில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள்.

ஆகவே வரலாறுகள் மதிக்கப்பட வேண்டும். எந்த இடத்திலும் நாங்கள் அதனை கொச்சைப்படுத்த முடியாது உணர்வு எல்லாரிடத்திலும் இருக்கின்றது.

அந்த நிகழ்வை மாற்றி அமைப்பது என்பது எந்தவகையிலும் ஏற்கமுடியாது என்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...