Jaffna Press Meet 1
செய்திகள்அரசியல்இலங்கை

இறந்தோரை நினைவு கூர நவம்பர் 20: எதிர்கால சந்ததிக்கு தவறாகக் கடத்தும்

Share

தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு, வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு தவறாக கடத்துமென பொது அமைப்புக்கள் சில வலியுறுத்தின.

கிராமிய உழைப்பாளர் சங்கம், மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு உள்ளிட்ட சில அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஆயர்களை எதிர்க்கவில்லை அவர்களை மதிக்கின்றோம். அதே நேரத்தில் நமது மனக்கவலையை நாம் இங்கே தெரிவிக்கின்றோம்.

கத்தோலிக்கர்களிடம் மாத்திரமே நாங்கள் கோரியதாக ஆயர் ஒருவரின் கருத்து பத்திரிகையொன்றில் இன்று வெளியானது.

இது தொடர்பில் ஆயர்கள் தெளிவுபடுத்தி தமது முடிவு தொடர்பில் பரிசீலிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் கடந்த காலங்களில் மாவீரர் நினைவு நாளை கொண்டாடும் பொழுது ஆலயங்களிலே மணி அடித்து அந்த நிகழ்வுக்கு வலுச் சேர்த்தவர்கள் என்ற வகையில் ஆயர்களுக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் மிகப் பலமான பங்களிப்பு இருக்கிறது.

இந்து ஆலயங்களை விட கிறிஸ்தவ ஆலயங்களை இந்த செயல்பாட்டில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள்.

ஆகவே வரலாறுகள் மதிக்கப்பட வேண்டும். எந்த இடத்திலும் நாங்கள் அதனை கொச்சைப்படுத்த முடியாது உணர்வு எல்லாரிடத்திலும் இருக்கின்றது.

அந்த நிகழ்வை மாற்றி அமைப்பது என்பது எந்தவகையிலும் ஏற்கமுடியாது என்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...