01 Do
செய்திகள்அரசியல்இலங்கை

முடிந்தால் சபைக்கு வாருங்கள்! – சஜித்துக்கு சவால்!!

Share

முடிந்தால் 06 ஆம் திகதி சபைக்கு வாருங்கள். எல்லாவற்றையும் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்பேன் என    கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே  அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார். போஸ்டர்களை ஒட்டவும், பிரச்சாரம் செய்யவும் அவர் பெரும் தொகை நிதியை செலவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் அந்த நபர் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை காரணமின்றி செலவுசெய்துள்ளார்.

தற்புகழுக்காக எவரும் இவ்வளவு நிதியை செலவிடமாட்டார்கள். எனவே, இது பற்றி விசாரிப்பதற்கும் தெரிவுக்குழு அவசியம்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தொடர்பில் 6 ஆம் திகதி சபையில் விவாதம் நடக்கவுள்ளது. அன்றைய தினம் சபையில் இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். அப்போது இவற்றை அம்பலப்படுத்துவேன். ஆடையின்றி வெளியேற வேண்டிய நிலையே எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்படும் என தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...