15
செய்திகள்உலகம்

பருவநிலை மாற்றமும், அதிகரிக்கும் வெப்பநிலையும்

Share

1980 ஆம் ஆண்டளவில் நாளொன்றில் பதிவான உச்ச வெப்பநிலையை விட, உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பானது இதுவரை உணரப்படாத இடங்களை விட மேலதிக இடங்களில் உண்டாகிறது எனவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

1980 மற்றும் 2009க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், வெப்பநிலை 50 டிகிரியை கடந்திருந்தது. எனினும் 2010 தொடக்கம் 2019க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 26 நாள்களாக நீடித்திருந்தது. தற்போது வெப்பநிலை 40 நாள்கள் வரை அதிகரித்துள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

புதைபடிம எரிபொருள்கள் எரியூட்டப்படுவதே இதற்கு 100 சதவீத காரணம் என பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளை ஆய்வு செய்யும் மூத்த அறிவியலாளர் வைத்தியர் பெட்ரிக் ஓட்டோ தெரிவித்துள்ளார்.

உலகில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் 50 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக சமுத்திர நீர்மட்டம் 2 மீற்றரால் உயர்வடைந்து சிறிய தீவுகள் மூழ்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது எனவும்  ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...