உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.
இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள்
- பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புகளை நிர்மாணிக்க 511 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- பொருட்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- வனஜீவரசிகள் பாதுகாப்புக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- சிறைக்கு கைதிகளின் உடல் நலனைப் பேணுவதற்கு 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
- பொதுமக்கள் பாதுகாப்புக்காக பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- அனைத்து வாக்காளர் தொகுதிக்கும் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு மேலும் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- தொழில் பயிற்சிக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- ரயில்வே பயணிகள் போக்குவரத்துக்கு மேலும் 2000 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
- விளையாட்டு மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- நீதித்துறை செயன்முறையை டிஜிட்டல் மயமாக்க மேலும் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- அரச நிறுவனங்களில் 2015 முதல் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- கிராமப்புறங்களில் மதத்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- கர்ப்பிணிப்பெண்களுக்கான போஷாக்கு பொதியை 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு 300 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
- ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 14,000க்கும் மேற்பட்ட வீட்டுக்கடைகளுக்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- வீட்டு அடிப்படையிலான பொருளாதாரம் மற்றும் நலனுக்கு 31,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- அரச துறையில் பட்டதாரி அடிசேர்ப்பு – ஏற்கனவே பணியமர்த்தப்பட்டோருக்கு 2022 இல் நிரந்தர வேலைவாய்ப்பு – 7,600 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
- வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்க 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- மது வரி அதிகரிப்பதால் 25 வீத வருமானம் பெற தீர்மானம்.
- தொழில்முறை சங்கங்களுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க முதல் கட்டமாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க யோசனை.
- மோட்டார் வாகன விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் விபத்தை ஏற்படுத்திய நபரிடமிருந்து கட்டணம் வசூலிப்பதற்கும், அதனை காப்பீடு மூலம் திரும்பிச் செலுத்துவதற்கும் வாய்ப்பு.
#SriLankaNews
Leave a comment