Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

சீன அமைச்சர்களுக்கு தமது நாட்டில் வேலைகள் இல்லை! – எள்ளி நகையாடிடுகிறார் பொன்சேகா

Share

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சீன அமைச்சர்களுக்கு அவர்களின் நாட்டில் வேலைகள் இல்லை என்பது போலவே தெரிகின்றது. வாரம் ஒருமுறை எவராவது இங்கு வந்துவிடுகின்றனர். அவ்வளவு பெரிய நாட்டில் இருந்து அவர்கள் இங்கு வருவதன் பின்புலம் பற்றியும் ஆராய வேண்டும்.

சீனாவின் வெளிவிவகார அமைச்சரை வரவேற்க எமது நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் சென்றார். வெளிவிவகார அமைச்சர் செல்லவில்லை. தனிப்பட்ட தேவைகளின் நிமித்தமான கொடுக்கல் – வாங்கல்களுக்காகவே அவர்கள் வருகின்றனர். அதனால்தான் இங்கும் தனிப்பட்ட ரீதியில் வரவேற்பளிக்கப்படுகின்றது.

இலங்கைமீதான அன்பால் அவர்கள் இங்குவரவில்லை. இலங்கைக்கு கடும் பாதிப்புகளை சீனாவே ஏற்படுத்தியது. எஞ்சியவற்றை அழிக்கவே அவர்களை இவர்களும் அழைத்துவந்து, எஞ்சியவற்றை பூஜை செய்கின்றனர். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...