China Ship
செய்திகள்அரசியல்இலங்கை

சீனாவின் சேதனப்பசளை விவகாரம்: மெதுவாகப் பின்வாங்கும் இலங்கை!-

Share

சீன நிறுவன விவாகரத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்குவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில், சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.

இந்தநிலையில் புதிய பசளைகளைக் கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தொிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

இந்த விவகாரத்தினால் ராஜதந்திர உறவுகளை பாதிக்க இடமளிக்கமுடியாது. அனுமதியின்றி இந்தக்கப்பல் வந்துள்ளதாக இலங்கை தரப்பில் கூறப்பட்டது.

வங்கிக்கடன் கடிதம் திறக்கப்பட்டதால், கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதாக சீன நிறுவனம் கூறியுள்ள நிலையிலேயே தற்போது முரண்பாடு எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...