Fertilizer
செய்திகள்அரசியல்இலங்கை

நிராகரிக்கப்பட்ட உரத்தை பலவந்தமாக கையளிக்க சீனா முயற்சி- அமைச்சர் சாடல்

Share

உரம் அடங்கிய கப்பலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என விசாரணை முடிவுகள் தெளிவாக நிரூபித்திருந்தாலும், அதனை எவ்வாறு இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் நிராகரிக்கப்பட்ட உரத்தை பலவந்தமாக கையளிக்க முயற்சிப்பதற்கு சீன நிறுவனத்திற்கு உரிமையில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை தொடர்பான பாரதூரமான பிரச்சினை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெற்றிடங்களுக்கான புதிய அமைப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்காணலுக்காக இன்று (27) காலை கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...