china 1
செய்திகள்உலகம்

கொரோனாவால் முடங்கும் சீனா- மூன்றாவது பெரு நகருக்கு முழு ஊரடங்கு

Share

சீனாவின் 3வது நகரும் கொரோனாவால் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு பெரு நகருக்கும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

சீனாவின் லான்ஸோ நகரம் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள மக்கள் தொகை 40 லட்சம். இதுபோல மங்கோலிய பிராந்தியத்தில் உள்ள ஏஜின் நகரும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இன்று சீனாவின் ஹெயிலோக்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹெய்ஹே நகருக்கும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது .

இந் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 60 லட்சம். இந்த மாகாணம் ரஷ்யாவுடன் எல்லையில் உள்ளது.

ரஷ்யாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 96 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 159 பேர் சாவடைந்தும் உள்ளனர். 85 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்தும் தொற்று இந்த குறிப்பிட்ட மாகாணத்துக்குப் பரவியிருக்கலாம் என சீனா தெரிவித்துள்ளது.

இந்த மாகாணம் முழுவதும் பாதிக்கப்பட்டோருடன் தொடர்ப்பில் இருந்த 16 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....