25 68f5bd64c9d96
செய்திகள்இலங்கை

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!

Share

இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர இது குறித்துத் தெரிவிக்கையில், இது இந்த ஆண்டுக்கான மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இரவு 11 மணிக்குப் பிறகு வானத்தை உற்று நோக்கும்போது ஓரியோனிட்ஸ் (Orionids) எனப்படும் விண்கல் மழையைக் காண முடியும்.

விஞ்ஞானியின் கூற்றுப்படி, அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை ஓரியோனிட்ஸ் விண்கல் மழையை மிகத் தெளிவாகக் காண முடியும்.

இந்த விண்கல் மழை ஓரியன் விண்மீன் கூட்டத்தைச் சுற்றிப் பயணிக்கிறது. மேலும், இந்த விண்கல் மழை ஹேலி (Halley) எனப்படும் வால் நட்சத்திரத்திலிருந்து (Comet) ஏற்படுகிறது என்றும் விஞ்ஞானி கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...