court hammer
செய்திகள்இலங்கை

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு! – மன்னாரில் சம்பவம்!

Share

மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அனுமதி பத்திரமின்றி சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...