court hammer
செய்திகள்இலங்கை

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு! – மன்னாரில் சம்பவம்!

Share

மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அனுமதி பத்திரமின்றி சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...