WhatsApp Image 2021 12 03 at 2.57.25 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கவனிப்பாரற்று பற்றை மண்டி! – பல லட்சங்களை செலவு செய்த அரசு

Share

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட புனரோதயம் எனும் வேலைத்திட்டத்திற்கு யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வலி. கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கோப்பாய் – கைதடி வீதியின் இருமருங்கிலும் உள்ள கருவேல மரங்கள் பைக்கோ இயந்திரங்களைக் கொண்டு அழிக்கப்பட்டு குறித்த பகுதி தூய்மைப்படுத்தப்பட்டு மரங்கள் நாட்டப்பட்டன.

இவ்வாறு வீதியின் இருமருங்கிலும் நாட்டப்படுகின்ற மரங்களை பாதுகாப்பதற்காக கொங்றீட் கற்களால் ஒவ்வொரு மரங்களைச் சுற்றியும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல லட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை வலி கிழக்கு பிரதேச செயலகமே தொடர்ச்சியாக பாராமரிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே குறித்த திட்டம் அமைந்துள்ளது.

எனினும் கடந்த இரண்டு வருடங்களாக நடப்பட்ட மரக்கன்றுகள் பாராமரிக்கப்படாததால் பல மரங்கள் அழிந்துள்ளன. அதுமட்டுமின்றி வீதியின் இருமருங்கிலும் மீண்டும் கருவேல மரங்கள் முளைத்து பற்றைக்காடாகி காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியில் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படுகின்றது. பல லட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் பிரதேச செயலகத்தால் பராமரிக்கப்படாமல் பற்றைமண்டி காணப்படுவதால் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

WhatsApp Image 2021 12 03 at 2.57.21 PM WhatsApp Image 2021 12 03 at 2.57.22 PM WhatsApp Image 2021 12 03 at 2.57.22 PM 1 WhatsApp Image 2021 12 03 at 2.57.23 PM WhatsApp Image 2021 12 03 at 2.57.24 PM WhatsApp Image 2021 12 03 at 2.57.25 PM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...