ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை 2022 ஜனவரி 08 ஆம் திகதி மறுசீரமைக்கப்படவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமரும் இணக்கம் வெளியிட்டுள்ளார். அந்த மாற்றத்தை ஜனவரி 08 ஆம் திகதி நிகழ்த்துவதா அல்லது 18 ஆம் திகதி நிகழ்த்துவதா என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.
முக்கியமான சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், புதிய சிலருக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment