சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக சீன நிறுவனங்கள் மீது பல குற்றசாட்டுக்கள் எழுந்தது .
இந்நிலையில் அதற்காக தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை உலகின் முதல் முழுமையான இயற்கை விவசாய நாடாக மாற்றும் நோக்கில் அனைத்து ரசாயன உர இறக்குமதிகளையும் கடந்த மே மாதமே அரசு நிறுத்திவிட்டதால், இத்தகைய இயற்கை உர இறக்குமதி தேவைப்பட்டது என்பதும் அது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment