valvettithurai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டாவது முறையும் தோற்கடிக்கப்பட்டது பாதீடு!!

Share

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பாதீடு தொடர்பான கூட்டம் தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது, பாதீடு திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இப் பாதீடும் தோற்கடிக்கப்பட்டது.

8 உறுப்பினர்கள் பாதீடுக்கு ஆதரவாகவும் 9 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் திருத்தங்களுடன் பாதீடு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாத் தொற்று காரணமாக வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் கே.கருணாந்தராசா கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற தவிசாரர் தெரிவில், புதிய தவிசாளராக என். செல்வேந்திரா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரண்டு பாதீடுகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துக்கள் குறித்து அதிகாரிகளின் எச்சரிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பட்டாசு தொடர்பான...

world 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய...

world 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா...