sakara
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிகளை வெளியேற்ற தயாராகும் மொட்டு கட்சி!

Share

எமது அபிவிருத்தி பயணத்தை குழப்புவதற்கு முற்படும் தரப்புகள் நிச்சயம் விலக்கப்படும். இனி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2022 ஆம் ஆண்டென்பது அபிவிருத்திக்குரிய வருடமாகும். அந்த இலக்கை நோக்கி வேகமாக பயணிப்பதே எமது நோக்கம். அதனை குழப்ப முற்படும் தரப்பு நிச்சயம் விலக்கப்படும். ஆளுங்கட்சியா, எதிரணியா என்பது முக்கியமில்லை. எவர் தடை ஏற்படுத்தினாலும் அது தகர்க்கப்படும்.

எம்மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை மீற செயற்படமாட்டோம்.”- என்றார்.

அதேவேளை, பங்காளிக்கட்சிகளை அரவணைத்து பயணிக்க வேண்டியது தலைமைக்கட்சியின் பொறுப்பாகும் என மொட்டு கட்சிக்கு பிரதமர் மஹந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதமரின் அறிவிப்பைகூட சவாலுக்குட்படுத்தும் விதத்தில் மொட்டு கட்சி செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...