Basil Rajapaksa PM
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் வியூகம்!

Share

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் ராஜபக்ச வியூகம் வகுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.

மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், பட்ஜட் கூட்டத்தொடரின் பின்னர் பதவி விலகுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்களான அதாவுல்லா, கருணா, ஹிஸ்புல்லா உட்பட பல தரப்புகளின் ஆதரவுடன் பிள்ளையான் களமிறங்கலாம் எனவும், இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கிழக்கு தேர்தல் களம் சவால்மிக்கதாக காணப்படும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்கான வாக்கு வங்கியை உடைப்பதற்காக உதிரிகளும் களமிறக்கப்படவுள்ளன.

பிள்ளையானை வைத்து பஸிலே தற்போது வியூகம் வகுத்துவருகின்றார். அதேவேளை, வடக்கு மாகாணத்திலும் முக்கிய புள்ளியொருவரை களமிறக்குவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...