Investigation
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பம்பலப்பிட்டி – உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதை! – விசாரணையில் அம்பலம்

Share

பம்பலப்பிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் அண்மையில் ஏழு மாடி கட்டடத்திலிருந்து மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதைப்பொருள் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே சிறுவனின் உடலில் மெத் ஆம்பெடமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

நீதிமன்ற இலக்கம் 3 நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி ராகுல் ஹக் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

மார்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ராஜா அபிலாஷ் என்ற சர்வதேச பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...