1573881708 rain 2
செய்திகள்இலங்கை

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

Share

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அபாயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, அடுத்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச காற்றழுத்தம் அதிதீவிரமாக வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய நிலை காணப்படுவதோடு 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் அதிகபட்ச மழைவீழ்ச்சியால் அபாயகரமான மண்சரிவுகள், நிலநடுக்கங்கள் நிகழக்கூடும்.

இதன்படி மொனராகலை, பதுளை, மாத்தளை, பொலநறுவை, அம்பாறை, முல்லைத்தீவு, அநுராதபுரம், மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 10 மாவட்டங்கள் அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களில் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...