pasalai
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை வந்தடைந்தது ஒரு தொகுதி பசளை

Share

இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதல் தொகுதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 12.25 மணிக்கு இந்த பசளைத் தொகுதி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL – 1156 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தது.

இந்தத் திரவப் பசளை, அம்பாறை, மட்டக்களப், திருகோணமலை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு, மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து, இலங்கையால் 31 லட்சம் லீற்றர் திரவ நைட்ரஜன் பசளை கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 5 லட்சம் லீற்றர் பசளை, இந்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளது.

குறித்த பசளையானது, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற உயர் ரக பசளையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...