Sarwesvaran 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சார்பற்ற நிதியம் ஒன்று அவசியம்!

Share

ஓய்வு நிலை அரச அதிபர் வேதநாயகன் தலைமையில் அரச சார்பற்ற நிதியம் ஒன்று உருவாக்கப்படவேண்டுமென யாழ் பல்கலைக்கழக கல்வியற் துறை விரிவுரையாளர்  இ சர்வேஸ்வரா  தெரிவித்துள்ளார்

அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் சேவை நயப்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள அளவெட்டி மண்ணின் மைந்தன் நா.வேதநாயகன் ஒரு நேர்மையான அரச அதிகாரி.

அந்த நேர்மையான அதிகாரியின் ஓய்வின் பின்னர் அவரது எதிர்காலம் தொடர்பில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது அவர் அரசியலுக்குள் நுழையலாம் எனவும் பேசப்படுகிறது

நேர்மையான அரச அதிகாரி அரசியல் பாதையில் சென்றால் அவரது நேர்மையை பாதிக்கும் எனவே அரசியல் பக்கம் செல்வதை தவிர்ப்பது நல்லது .மேலும்

அளவையூர் மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

அரசினால் செய்ய முடியாத பல திட்டங்களை புலம்பெயர் மக்களின் உதவியுடன் செய்ய முடியும் உதாரணமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற அமைப்பின் ஊடாக முன்னர் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன

அதேபோல நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஒரு அரச சார்பற்ற நிதியம் ஒன்றினை உருவாக்குவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பல மில்லியன் ரூபா நிதி உதவிகளை பெற்று அரசினால் செய்ய முடியாத பல திட்டங்களை எமது பிரதேசங்களில் முன்னெடுக்க முடியும்.

குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற அமைப்பின் ஊடாக புலம்பெயர் நாட்டில் இருந்து கிடைத்த நிதி மூலம் பல்வேறுபட்ட மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...