gover
செய்திகள்அரசியல்இலங்கை

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு

Share

அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

இலங்கையில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 450 அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

6 லட்சத்து 66 ஆயிரத்து 480 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும். சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகமாக 1000 ரூபா வழங்கப்படும். அவர்கள் தற்போது 3 ஆயிரத்து 500 ரூபாவை மாதாந்தம் பெறுகின்றனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் மாதாந்தம் 15 கிலோ கோதுமைமா மானிய நிலையில் வழங்கப்படும். ஒரு கிலோவுக்கு 40 ரூபா குறைக்கப்பட்டு, கிலோ 80 ரூபா வீதம் வழங்கப்படும்.

புதிதாக எந்த வரியையும் அறவிடமாட்டோம்.” – என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...