vijaya
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சீரழித்துவிட்டு பஸில் அமெரிக்கா பறந்துவிடுவார்! – கூறுகிறார் விஜயதாச

Share

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமையவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2021 ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நம்பித்தான், 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கினேன். ஆனால் புதிய அரசமைப்பு இன்னும் கொண்டுவரப்படவில்லை. நாட்டு மக்களை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார். 20 இற்கு ஆதரவளித்ததால் தற்போது மனம் வருந்துகின்றேன்.

பஸில் ராஜபக்ச நாட்டு வளங்களை விற்று பிழைப்பவர். மஹிந்தவையும் அவரே கட்டுப்படுத்துகின்றார். கோட்டாபய ராஜபக்ச என்பவர் பஸிலால் இயக்கப்படும் கைப்பாவை. இந்த நாட்டை சீரழித்துவிட்டு பஸில் எப்படியும் அமெரிக்கா சென்றுவிடுவார்.” – என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...