vijaya
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சீரழித்துவிட்டு பஸில் அமெரிக்கா பறந்துவிடுவார்! – கூறுகிறார் விஜயதாச

Share

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமையவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2021 ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நம்பித்தான், 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கினேன். ஆனால் புதிய அரசமைப்பு இன்னும் கொண்டுவரப்படவில்லை. நாட்டு மக்களை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார். 20 இற்கு ஆதரவளித்ததால் தற்போது மனம் வருந்துகின்றேன்.

பஸில் ராஜபக்ச நாட்டு வளங்களை விற்று பிழைப்பவர். மஹிந்தவையும் அவரே கட்டுப்படுத்துகின்றார். கோட்டாபய ராஜபக்ச என்பவர் பஸிலால் இயக்கப்படும் கைப்பாவை. இந்த நாட்டை சீரழித்துவிட்டு பஸில் எப்படியும் அமெரிக்கா சென்றுவிடுவார்.” – என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...