vijaya
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சீரழித்துவிட்டு பஸில் அமெரிக்கா பறந்துவிடுவார்! – கூறுகிறார் விஜயதாச

Share

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமையவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2021 ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நம்பித்தான், 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கினேன். ஆனால் புதிய அரசமைப்பு இன்னும் கொண்டுவரப்படவில்லை. நாட்டு மக்களை ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார். 20 இற்கு ஆதரவளித்ததால் தற்போது மனம் வருந்துகின்றேன்.

பஸில் ராஜபக்ச நாட்டு வளங்களை விற்று பிழைப்பவர். மஹிந்தவையும் அவரே கட்டுப்படுத்துகின்றார். கோட்டாபய ராஜபக்ச என்பவர் பஸிலால் இயக்கப்படும் கைப்பாவை. இந்த நாட்டை சீரழித்துவிட்டு பஸில் எப்படியும் அமெரிக்கா சென்றுவிடுவார்.” – என்றும் விஜயதாச குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...