mullai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி ! – முல்லை. நீதிமன்று அதிரடி

Share

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து தீர்ப்பளித்துள்ளது முல்லைத்தீவு நீதிமன்றம்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து குறித்த தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

“இறந்தவர்களை நினைவுகூருவது மனித பண்பு. நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்றாலும், குறித்த அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவுகூரலாம்” என தெரிவித்த நீதிபதி ஏற்கனவே வழங்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து கட்டளையிட்டார்.

குறித்த நகர்த்தல் பத்திரத்திர விசாரணை வழக்கில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், வி.எஸ்.தனஞ்சயன், கணேஸ்வரன், ருசிகா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், கடந்த 17ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...