1737305325 school closed
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மூடல்: ஆளுநர் அதிரடி உத்தரவு!

Share

மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) முதல் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு இடையே இன்று (18) அதிகாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (டிசம்பர் 19) முதல் பாடசாலைகள் மூடப்படும். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபனி பியசேன இது குறித்துத் தெரிவிக்கையில், “கிறிஸ்துமஸ் விடுமுறையைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த அவசர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

வெப்பமான வானிலையானது மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...

hr d
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள அதிகாரிகள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...