Gottabhaya 1
செய்திகள்அரசியல்இலங்கை

விரைவில் சர்வகட்சி மாநாடு! – ஜனாதிபதி இணக்கம்

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் சர்வக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மேற்படி சந்திப்பில் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். மறுபுறத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் இரு மணிநேரம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...