ajith nivard cabraal 78678
செய்திகள்இலங்கை

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!

Share

ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்!

மத்திய வங்கியின் ஆளுநராக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்து மத்திய வங்கி ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் – என்றார்.

இது தொடர்பில் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் ஆளுநராக பெரும்பாலும் நான் பெறுப்பேற்க உள்ளேன். நாடு தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியை சிறப்பாக நிர்வகிக்க வேண்டிய தேவை உள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கைக்கு அமையவே இராஜாங்க அமைச்சர் பதவியை அர்ப்பணிப்பு செய்து மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளேன்.

இதேவேளை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படுமென ஊடகவியலாளர் எழுப்பியக் கேள்விக்கு “அது கட்சி தீர்மானிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...