makeshan
செய்திகள்இலங்கை

போதியளவு எரிபொருள் கையிருப்பில்! – யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன்

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மக்களுக்கு தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்ற எண்ணத்தில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் 14 சதவீத பெற்றோல் மற்றும் 29 சதவீத டீசல் தேவைகளை மட்டுமே நிறைவு செய்கிறது. எனவே இந்த எரிபொருள் நிரப்பு நிலைய பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது” என்றார்.

காங்கேசன்துறை தொட்டியில் பெற்றோல் 92 ஒக்ரைன் – 155 ஆயிரம் லீற்றர், டீசல் – 2,600,000 லீற்றர்
மண்ணெண்ணெய்- 165,000 லீற்றர் நாளைய தினம் வழங்கப்படவுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...