Gautam Adani
செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கிலும் கால்பதிக்கும் அதானி குழுமம்!!

Share

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானிக்கு சொந்தமான இந்தியாவின் அதானி குழுமம், மன்னாரில் 1 பில்லியன் டொலர் மதிப்பில் 1,000 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அதானி நிறுவனம் இரண்டாவது காற்றாலை மின் திட்டத்தை பூநகரி பிரதேசத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட போது முதலீட்டு முன்மொழிவுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட முதலீட்டு மேலாண்மைக் குழுவுக்கு BOI பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் BOI ஆல் வரையப்படும் என்றும், BOI நிலையான எரிசக்தி ஆணையகத்தின் (SEA) தலைவர், திறைசேரி செயலாளர் மற்றும் CEB தலைவர் ஆகியோரால் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்மொழிவின் மூலம், அதானி குழுமம் மன்னாரில் 1,000 மெகாவாட் காற்றாலை ஆற்றல் திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் எவ்வாறாயினும், இத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து தமக்கு தெரியாது என இ.மி.ச தலைவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், வடக்கில் மூன்று தீவுகளில் சினோ சோர் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கலப்பின ஆற்றல் அமைப்பு திட்டத்தை இடைநிறுத்த சீனா முடிவு செய்துள்ளதாக சீன தூதரகம் கடந்த வியாழக்கிழமை (2) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...