sl01 scaled
செய்திகள்இலங்கை

பாடசாலைகளை மீளவும் திறப்பதற்கு நடவடிக்கை! கல்வி அமைச்சு தகவல்

Share

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நான்கு கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,884 பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரை முதல் கட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி தேவையில்லை என்பதால், தரம் 1 முதல் 5 வரை பாடசாலைகளை திறப்பதற்கான முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கான பாதுகாப்பான சூழல் குறிப்பிட்ட பாடசாலைகள் உள்ளனவா என்பது குறித்து மாகாண ஆளுனர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் இணைந்து கண்காணிப்புக்களை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, பாடசாலைகளின் சுகாதாரத்தை உறுதிசெய்த பிறகு, பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...