LK94008324 02 E
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

கட்டுவன்- மயிலிட்டி வீதியை விடுவிக்க நடவடிக்கை

Share

இராணுவக்கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்த யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையான கட்டுவன்- மயிலிட்டி வீதியின் 400மீற்றர் தூரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதிப்பகுதியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதற்கமைய உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள 400 மீற்றர் பகுதியின் முட்கம்பி வேலிகள் இராணுவத்தினரால்  பின்நகர்த்தப்பட்டு  400 மீற்றர்  பகுதியை கட்டுவன்-மயிலிட்டி வீதியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்சமயம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிகள் அகற்றப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து ஆறு மீற்றர் தூரம் பாதுகாப்பு வேலிகளை நகர்த்தி 400மீற்றர் நீளமான பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...