LK94008324 02 E
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

கட்டுவன்- மயிலிட்டி வீதியை விடுவிக்க நடவடிக்கை

Share

இராணுவக்கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்த யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையான கட்டுவன்- மயிலிட்டி வீதியின் 400மீற்றர் தூரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதிப்பகுதியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதற்கமைய உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள 400 மீற்றர் பகுதியின் முட்கம்பி வேலிகள் இராணுவத்தினரால்  பின்நகர்த்தப்பட்டு  400 மீற்றர்  பகுதியை கட்டுவன்-மயிலிட்டி வீதியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்சமயம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிகள் அகற்றப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து ஆறு மீற்றர் தூரம் பாதுகாப்பு வேலிகளை நகர்த்தி 400மீற்றர் நீளமான பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...