sugar
செய்திகள்இலங்கை

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

Share

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் சொரியாக விற்கப்படும் வெள்ளைச்சீனி 122 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்டால் 125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை சொரியாக விற்கப்படும் சிவப்பு சீனி125 ரூபாயாவாகவும் பொதி செய்யப்பட்டால் 128 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பில் கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவிக்கையில்,

முதற்கட்டமாக 20 ஆயிரம் கிலோகிராம் சிவப்பு சீனியும் 60 ஆயிரம் கிலோகிராம் வெள்ளை சீனியுமாக 80 ஆயிரம் கிலோகிராம் சீனியையும் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் மக்களுக்கு தேவையான சீனியை கூட்டுறவு சங்கங்களினூடாக வழங்கும் நடவடிக்கையில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட சீனி, புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 17 ஆயிரம் கிலோவும், கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 30 ஆயிரம் கிலோவும், ஒட்டுசுட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 2 ஆயிரம் கிலோவும், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 5 ஆயிரம் கிலோவும் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 6 ஆயிரம் கிலோவும் வழங்கப்படவுள்ளது’ – என்றார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...