sugar
செய்திகள்இலங்கை

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

Share

முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் சொரியாக விற்கப்படும் வெள்ளைச்சீனி 122 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்டால் 125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை சொரியாக விற்கப்படும் சிவப்பு சீனி125 ரூபாயாவாகவும் பொதி செய்யப்பட்டால் 128 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பில் கூட்டுறவு சங்க அதிகாரி தெரிவிக்கையில்,

முதற்கட்டமாக 20 ஆயிரம் கிலோகிராம் சிவப்பு சீனியும் 60 ஆயிரம் கிலோகிராம் வெள்ளை சீனியுமாக 80 ஆயிரம் கிலோகிராம் சீனியையும் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் மக்களுக்கு தேவையான சீனியை கூட்டுறவு சங்கங்களினூடாக வழங்கும் நடவடிக்கையில் பலநோக்குக் கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட சீனி, புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 17 ஆயிரம் கிலோவும், கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 30 ஆயிரம் கிலோவும், ஒட்டுசுட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 2 ஆயிரம் கிலோவும், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 5 ஆயிரம் கிலோவும் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு 6 ஆயிரம் கிலோவும் வழங்கப்படவுள்ளது’ – என்றார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை: சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவுப் பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று...

04 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிரடி உயர்வு: நள்ளிரவு முதல் புதிய விலை பட்டியல் அமுல்!

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின்...

03 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்: தேசிய சேமிப்பு வங்கியும் இணைப்பு!

க.பொ.த (உயர்தரம்) தேர்வில் சித்தியடைந்தும், இடப்பற்றாக்குறை மற்றும் பொருளாதாரக் காரணங்களால் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத...

02 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பிரசாத் ரணசிங்க, இலஞ்ச...