corona 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொரோனாவால் வடக்கில் 71 பேர் உயிரிழப்பு!

Share

கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில்  2 ஆயிரத்து 612 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை 71 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும்  உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 74 பேர் கொவிட்- 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 865 பேரும், வவுனியா மாவட்டத்தில் 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 654 பேரும், மன்னார் மாவட்டத்தில் 273 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 117 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேரும் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 833 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...