Kathirkamam
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கதிர்காமத்தில் 38 பவுண் தங்கத்தகடு மாயம்!!! – விசாரணைகள் ஆரம்பம்

Share

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஒன்று காணாமல் போயுள்ளது.

நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு பக்தர் ஒருவரால் ஆலயத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 38 பவுண் எடையுடைய தங்கத் தங்கத்தகடே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பகுதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. காட்சிகள் உட்பட மேலும் பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...