24 66643eef57c7c
இந்தியாசெய்திகள்

இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

Share

இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

இந்தியாவில் (India) புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கும் வரை பிரதமர் மோடியை வாழ்த்துவது பற்றி விவாதிப்பது முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் செயலாக இருக்கும் என்று பாகிஸ்தான் (Pakistan) வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேர்தல் செயல்முறை குறித்து பாகிஸ்தானிடம் எந்தக் கருத்தும் இல்லை.

எனினும் புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்கவில்லை என்பதால், பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது பற்றி பேசுவது உரிய காலத்துக்கு முன்னரான செயலாகும் என்று பேச்சாளர் மும்தாஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளுடன் நட்பு மற்றும் கூட்டுறவுகளை விரும்புவதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டிற்காக பாகிஸ்தான் எப்போதும் எதிர்பார்க்கிறது.

மேலும், குறிப்பாக ஜம்மு மற்றும் காஸ்மீரின் முக்கிய தகராறு உட்பட அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக பேச்சாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...