ezgif 2 06d33fc897
இந்தியாசெய்திகள்

சர்வதேச கடல் எல்லையில் இந்தியா- இந்தோனேஷியா படைகள்

Share

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுடன் இணைந்து, சர்வதேச கடல்சார் பாதுகாப்பை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியா – இந்தோனேஷியா கடற்படைகள் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி கடந்த 8ம் தேதி தொடங்கியது. வரும் 19ம் திகதி வரை நடைபெறும் இந்த ரோந்து பணியின்போது, கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடிப்பு, போதைப்பொருள் கடத்தல், கடல்சார் தீவிரவாதம், ஊடுருவல், போன்றவற்றைத் தடுத்து நிறுத்தும் பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மேலும், கடற்கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோத அகதிகள் குடியேற்றம் ஆகியவற்றைத் தடுக்கவும் இந்த ரோந்து பணி உதவிகரமாக இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல்சார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடைபெற்று வரும் இந்த பணியில் இந்தியா சார்பில், உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பலான ஐஎன்எஸ் கர்முக், எல்-58 கப்பல் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படுகின்றன. இந்தோனேஷியா சார்பில் கேஆர்ஐ கட் நியாக் டைன், கபிடன் படிமுரா கிளாஸ் கேர்வீட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...