766737 ei 1
இந்தியாசெய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘சீல்’

Share

ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.

இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகமாக காணப்பட்டது. ஒரு கட்டத்திற்கு மேல், தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன. அதன் பின் அங்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில மணி நேரம் அதிமுக தலைமை அலுவலகத்திலேயே இருந்து அவரது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் சற்று நேரத்திற்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். இதனிடையே, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அதிமுக தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் கலவரமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமை கழகத்தில் உள்ள அனைத்து அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் மோதலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை கழக அலுவலகம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

viber image 2022 07 11 13 41 01 240 824913

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...