பேரறிவாளன் விடுதலை
அரசியல்இந்தியாசெய்திகள்

30 வருடங்களின் பின் பேரறிவாளன் விடுதலை!

Share

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேரறிவாளனுக்கு விடுதலை கோரும் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போது, அவரை ரஜீவ் காந்தி கொலை வழங்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துபூர்வ வாதங்களைத் தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனுக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது.

சட்டப்பிரிவு 142 ஐப் பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இதேவேளை, ஆளுநர் முடிவு எடுக்காமல் இந்த விடயத்தில் தாமத்தப்படுதியது தவறு எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, சிகிச்சைகளுக்கு இடமளிக்கும் வகையில் 2021 மே மாதம் முதல் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருக்குத் தற்போது விடுதலை கிடைத்துள்ளது.

#indianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...