Train
செய்திகள்இலங்கை

ரயில் சேவையை நாடும் மக்கள்! – கட்டணமும் அதிகரிக்கிறது

Share

பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுவழி தேர்வை நோக்கி பயணிகள் நகர்வதை காணமுடிகின்றது.

தொழில் உட்பட இதர தேவைகளுக்காக இதுவரை காலமும் பஸ்களில் பயணித்தவர்கள்கூட, தற்போது ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும், இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரு கிலோமீற்றர் வரையில் பயணம் மேற்கொள்பவர்கள் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளனர் எனவும், சிலர் சைக்கிள்களை பயன்படுத்திவருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ரயில் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...